31.3.20

பாதியில் நிறுத்தியது...

அவசர அவசரமாய் அவளுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி,
அருகாமைக் கடை மூடிக் கிடந்ததால் அரைக் கிலோமீட்டர் தாண்டி,
ஆகாயமென பரந்து கிடக்கும் ஆடம்பர நகரத்திலே,
ஆறடுக்கு மாடி கொண்ட சூப்பர்மார்க்கெட் தேடி அலைந்தோம்.

காவேரித்தண்ணீரை தரமறுத்து, போராட வழியறியா ஊர்மக்கள் சில பேரும்
நடுரோட்டில் மறித்தென்னை, வழிமாறி செல்லச்சொல்ல,
மறுபக்கம் திரும்புகையில் வாகனஎண் தநா எனக்கண்டு
நக்கலாய் சொன்னார்கள் திரும்பாதே எரித்திடுவோமென்று.

திசைமாறி சென்றாலும் நெருப்புக்கிரையாகேன் என்றழுத என்வண்டி,
எனையேதும் கேக்காமல் எண்பதைத் தாண்டி எகிறிச் செல்ல,
என்னிதயத் துடிப்பதுவும் நூற்றைத் தாண்டியது.