4.4.16

கிழவனின் குறள்வளம்




இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல். 
                                                               -திருவள்ளுவர்.
இந்த வேலையை இந்த காரணத்தினால் இந்த தனி ஒருவன் செய்து முடிப்பானா என்று ஆராய்ந்து அவனை வேலையில் அமர்த்திய பின்பு அந்த வேலையை மொத்தமாக அவனிடமே விடவேண்டும். இது தான் இந்த குறளின் பொருள் ஆகும். 

Planning, Organizing, Staffing, Directing and Controlling - என நாம் 20-ம் நுற்றாண்டின் வெளிநாட்டு ஆசிரியர்கள் எழுதும் மேலாண்மை தத்துவங்களை பெரிதாகக் கருதும் வேளையில் இந்த இரண்டாயிரத்து நூறு வயதுக் கிழவனாம் வள்ளுவனின் வார்த்தைகளைப் படியுங்கள். கி.மு. 3ம் நுற்றாண்டுக்கும் கி.மு. முதல் நூற்றாண்டுக்கும் இடையே வாழ்ந்த இந்த முனிவன் இன்றைய காலத்துக்கும் ஏற்றாற்போல் நிர்வாகத்திறன் (Management skills), வேலைக்கான நேர்காணல் (Employment interview), மதிப்பீடல் (Evaluation), வேலையைப் பகிர்ந்தளித்தல் (Task delegation) என அனைத்து மேலாண்மை செயல்பாடுகளையும் இரண்டே அடியில் ஏழே வார்த்தைகளில் புரிய வைத்துவிட்டான்.

இனி மாஸ்லோ, பிலிப் கோட்லர் புத்தகங்களை வாங்கி பெரிய பெரிய பெட்டிகளில் வைத்து பூட்டி வைப்பதற்கு பதில் கையிலடங்கும் திருக்குறள் புத்தகத்தை வாங்கிக் கொள்ளப் பழகலாம் போல..