ஒவ்வொரு
மனிதனின் உடலிலும் நோய் எதிர்ப்புத்தன்மை (Immunity) என்பது பிறப்பிலேயே உருவாகிறது.
வெள்ளை ரத்த அணுக்கள் (White Blood Cells) தான் இந்த நோய் எதிர்ப்புத் தன்மைக்கு மூலக்காரணம்.
இவ்வகையான வெள்ளையணுக்கள் நம் எலும்பு மச்சையில் (Bone Marrow) தான் உருவாகின்றன. அவை
அப்படியே நம் இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் மிகுந்த ஆற்றலுடனே திரியும்.
நம்
உடலில் எதாவது காயம் ஏற்படும்போது அந்த இடத்தின் வழியாக வைரஸ்களும் பாக்டீரியாக்களும்
உடலின் உள்ளே நுழைய முனையும். வெள்ளையணுக்கள் இத்தகைய நேரத்தில் மிகத் துரிதமாக செயல்பட்டு
அந்த கிருமிகளுடன் போரிட்டு விரட்டுகின்றன. காயம் ஏற்பட்ட இடத்தில் வெள்ளை நிறத்தில்
பஸ் (Pus) என்னும் திரவம் வெளி வருவது என்னவென்று தெரியுமா? இவ்வாறாக போரிட்டு மடிந்த
வெள்ளையணுக்களும் கிருமிகளும் தான்!
நுண்ணுயிரிகள்
நம் உடலில் நுழைய முனையும்போது அவற்றை அழிக்க வெள்ளையணுக்கள் போராடும். இவ்வாறாக போராடும்
அந்த போராளிகளின் இராஜ தந்திரம் தான் காய்ச்சல்! கிருமிகள் நம் உடல் வெப்பத்திலேயே
வாழத் தகுதி கொண்டவை. அதனால் அவற்றை மிக எளிதாக விரட்டி அடிக்க நமது நோய் எதிர்ப்பு
தன்மையானது நம் உடலின் வெப்பத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் வாழும் தகுதியை இழக்கும்
கிருமிகள் செத்துப் போகின்றன. இவ்வாறாக வெள்ளையணுக்கள் மிக எளிதாக அவற்றை விரட்டியடிக்கின்றன.
வெள்ளையணுக்களின் இந்த போர்த்தந்திரம் தான் காய்ச்சல் எனப்படுகிறது.
இந்த
வெள்ளையணுக்களுக்கு இன்னொரு சிறப்புத் தன்மையும் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பாக்டீரியாவோ
வைரஸோ நம் உடலைத் தாக்கும்போது அதன் அடையாளத்தையும் அதனை அழிக்க பயன்படும் நோயெதிர்
பொருளின் அடையாளத்தையும் தனக்குள் சேமித்துக்கொள்ளும் இந்த வெள்ளையணுக்கள் அதன் பின்னர்
மறுமுறை அதே கிருமி வரும்போது அதே நோயெதிர்பொருளை (Antibody) வெளியிட்டு அந்த கிருமிகளை
அழிக்கின்றன.
இனிமேல் காய்ச்சல் வந்தால் யாரும் கவலைப் படாதீர்கள். காய்ச்சல்
அடித்தால் உங்கள்நோயெதிர்ப்பு திறன் நலன்றாக வேலை செய்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.