28.5.18

உழவன்



ஏர்பூட்டி நீரூற்றி, எள்ளளவு பயிராக்கி,
தான்பெற்ற தன்மக்கள், பிணியோடு தடுமாட,
எப்பாடு பட்டேனும், என்மக்கள் பசிபோக்க, 
உடுத்த உடையில்லாமல், உண்ணாம லுறங்காமல், 
வேகாத வெய்யிலிலும், வேர்வைக் குளியலிடும் 

வெள்ளை மன வேந்தனவன்,
இம்மண்ணின் உழவனவன்!