ஏர்பூட்டி நீரூற்றி, எள்ளளவு பயிராக்கி,
தான்பெற்ற தன்மக்கள், பிணியோடு தடுமாட,
எப்பாடு பட்டேனும், என்மக்கள் பசிபோக்க,
உடுத்த உடையில்லாமல், உண்ணாம லுறங்காமல்,
வேகாத வெய்யிலிலும், வேர்வைக் குளியலிடும்
வெள்ளை மன வேந்தனவன்,
இம்மண்ணின் உழவனவன்!